ஓட்டப்பிடாரம், மார்ச் 14: தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் போத்திநாராயணன் (43). இவரது 18 வயது மகள், கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு போத்திநாராயணன், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், புதியம்புத்தூர் போலீசார் வழக்கு பதிந்து போத்திநாராயணனை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
The post கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: தந்தை கைது appeared first on Dinakaran.
