×

கோவில்பட்டி அருகே கண்டெய்னர் லாரி மோதி இரு கார்கள் நொறுங்கியது

*4 பேர் காயம்

கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே கண்டெய்னர் லாரி மோதியதில் 2 கார்கள் நொறுங்கின. இதி 4 பேர் காயமடைந்தனர். நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் உச்சினிமாகாளி. கண்டெய்னர் லாரி டிரைவர். நேற்று இவர், தூத்துக்குடியில் இருந்து மதுரையை நோக்கி கண்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்றார்.

கோவில்பட்டியை அடுத்த சிவணைந்தபுரம் போலீஸ் சோதனைச் சாவடியை கடக்க முயன்ற போது திடீரென்று லாரி கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாக வந்த இரு கார்கள் மீது மோதியதோடு சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரின் மீதும் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார்கள் அப்பளம்போல் நொறுங்கின. காரில் இருந்த 4 பேர் லேசான காயமடைந்தனர்.

தகவலறிந்து சாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாலையின் நடுவே கவிழ்ந்து கிடந்த லாரியை போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.

விபத்து தொடர்பாக சாத்தூர் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post கோவில்பட்டி அருகே கண்டெய்னர் லாரி மோதி இரு கார்கள் நொறுங்கியது appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,Uchinimakaali ,Gangaikondan ,Nellai district ,Thoothukudi… ,Dinakaran ,
× RELATED மாயமான வாய் பேச முடியாத மூதாட்டி காவல்...