திருவாடானை, மார்ச் 11: திருவாடானை காவல் நிலையத்தில் உலக மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெண்களின் சாதனைகளையும், தியாகங்களையும் போற்றும் வகையில் காவல் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சார்பு ஆய்வாளர் கலா தலைமையில் மகளிர் காவலர்கள் அனைவரும் உற்சாகமாக கலந்து கொண்டு உலக மகளிர் தினத்தை சிறப்பித்தனர்.
சிறப்பு விருந்தினராக காவல் நிலையத்திற்கு வந்திருந்த பெண்களுக்கு கேக் வெட்டி இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பெண்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு உரையாடல்களும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் ஜெயபாண்டியன், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
The post போலீஸ் நிலையத்தில் மகளிர் தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.
