- உலக மகளிர் தினம்
- திண்டுக்கல்
- திண்டுக்கல் ஆசிர் அறக்கட்டளை
- ஆசிரியர்
- மகா லட்சுமி
- அறக்கட்டளை இயக்குநர்
- அஜய் ராஜ்குமார்
- திமுக
- வசந்தி கணேசன்
- தாங்கப்பாண்டி
- அன்பரசு
- தின மலர்
திண்டுக்கல், மார்ச் 10: திண்டுக்கல் ஆசீர் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. ஆசிரியர் மகாலட்சுமி தலைமை வகித்தார். அறக்கட்டளை இயக்குனர் அஜய் ராஜ்குமார் வரவேற்றார். திமுக நிர்வாகி வசந்தி கணேசன், சமூக ஆர்வலர்கள் தங்கப்பாண்டி, அன்பரசு, வழக்கறிஞர் சுதந்திரா தேவி முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாட்டாண்மை காஜா மைதீன், காங்கிரஸ் மாநகர தலைவர் துரை மணிகண்டன் ஆகியோர் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். இந்நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன், திருக்குறள் பேரவை கவிஞர் சிவகுமார், கவிஞர் ஜீவி, நாகேந்திரன் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post திண்டுக்கல்லில் உலக மகளிர் தின விழா appeared first on Dinakaran.
