×

மாநில அளவிலான செஸ்: பண்ருட்டி பள்ளியில் நாளை தொடக்கம்

பண்ருட்டி: தமிழ்நாடு அளவிலான 8வது சதுரங்கப் போட்டி பண்ருட்டி மேலப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் நாளை தொடங்குகிறது. இந்தப் போட்டியில் பல்வேறு கல்லூரி, பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் விளையாடுகின்றனர். மொத்தம் 7 சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டியில் இலக்கியன், இளமாறன், பூபாலன், இசைப்பிரியா, காவியன், பேரனியன், தாமரை, தமிழ்நிலா போன்ற 68 முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் களம் காண உள்ளனர்.
இப்போட்டி யு8, யு10, யு 12, யு 14, யு 16, யு24 என வயது அடிப்படையில், 6 பிரிவுகளில் மாணவர்கள், மாணவிகள் என 2 பிரிவுகளாக நடத்தப்படும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு நாளை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் கோப்பைகளுடன் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படும்.

The post மாநில அளவிலான செஸ்: பண்ருட்டி பள்ளியில் நாளை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Panruti ,8th Tamil Nadu-level chess tournament ,Panruti Melapalayam ,Ilakkiyan ,Ilamaran ,Bhoopalan ,Isaiapriya ,Kaviyan ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்துடன் முதல் ஓடிஐ இந்தியா அமோக வெற்றி: கோஹ்லி 93 ரன் விளாசல்