- அரூர்
- அரூர் மோட்டார் வாகனம்
- இன்ஸ்பெக்டர்
- குலோத்துங்கன்
- அரூர் பைபாஸ் ரோடு
- கோபிநாதம்பட்டி கூட்ரோடு
- சாமியாபுரம் கூட்ரோடு
- மஞ்சவாடிகணவாய்
- தின மலர்
அரூர், மார்ச் 5: அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன், அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி கணவாய் ஆகிய இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். ஒரு மாதத்தில் 323 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. அப்போது சரக்கு வாகனத்தில் ஆட்கள் ஏற்றி வந்தது. ஆம்னி பஸ்கள், உரிய அனுமதியின்றி அதிக பாரம் ஏற்றி வண்டிகள், அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் உள்ளிட்ட 137 வாகனங்களுக்கு வரி 3,15,825, அபராதம் 4,11,300 என மொத்தம் ₹7,26,925 விதிக்கப்பட்டு எச்சரிக்கை செய்து அனுப்பினர். முறையான ஆவணம் இல்லாத 21 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் கூறுகையில், ‘வாகனம் ஓட்டும் போது, செல்போன் பயன்படுத்த கூடாது, கட்டாயம் தலை கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும், வாகனம் முன், பின்புறத்தில் பம்பர் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும்,’ என்றார்.
The post வாகன தணிக்கையில் ₹7.27லட்சம் அபராதம் appeared first on Dinakaran.
