சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
வள்ளலார், புத்தர், மகாவீரர் போன்ற மகான்களின் வழியில் சமுதாய மறுமலர்ச்சிக்காக தொண்டாற்றிய அய்யா வைகுண்டர் பிறந்தநாள் மார்ச் 4ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. வைகுண்டரின் வழியில் இயங்கி வரும் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
வைகுண்டரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் விடுமுறை என்ற அறிவிப்பை வெளியிடவும், வைகுண்டர் பிறந்தநாளன்று தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
The post அய்யா வைகுண்டர் பிறந்த நாளில் மதுக்கடைகளை மூட வைகோ வேண்டுகோள் appeared first on Dinakaran.
