நத்தம், பிப். 23: நத்தம் அருகே உலுப்பகுடியை சேர்ந்தவர் சின்னச்சாமி (75). இவர் அங்குள்ள ஊரணி கரை பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதே ஊரை சேர்ந்த நாகராஜ் என்பவர் ஓட்டி வந்த டூவீலர் சின்னச்சாமி மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னச்சாமி உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நத்தம் அருகே டூவீலர் மோதி முதியவர் பலி appeared first on Dinakaran.
