திருப்பூர், பிப்.22: திருப்பூர் காங்கயம் ரோடு கோம்பைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் உசேன் (44). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் காங்கயம் ரோட்டில் வேஸ்ட் குடோன் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் உசேன் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்து புறப்பட்டு ரயில் நிலையம் வந்த உசேன் தீடிரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த பொதுமக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உசேன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
The post வேஸ்ட் குடோன் உரிமையாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை appeared first on Dinakaran.

