அந்தியூர், பிப்.20: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமையன்று நிலக்கடலை ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏல விற்பனையில் காய்ந்த நிலக்கடலை 80 மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தது. இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலை ரூ56.06க்கும், அதிகபட்ச விலையாக ரூ.67.67 வரை ரூ.1 லட்சத்து 63ஆயிரத்து 328க்கு ஏலம் போனது. பச்சை நிலக்கடலை 157 மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்ததில், கிலோ ஒன்று குறைந்தபட்சம் ரூ.31.31க்கும் அதிகபட்சம் ரூ 38.98வரை ரூ.2 லட்சத்து 98 ஆயிரத்து 321க்கு விற்பனையானது. மொத்தமாக நிலக்கடலை ரூ.4 லட்சத்து 61 ஆயிரத்து 649க்கு ஏலம் போனது.
The post நாரூ.4.61 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் appeared first on Dinakaran.
