×

பளுதுாக்கும் வீராங்கனை பயிற்சியின்போது மரணம்

பிகானிர்: ஜூனியர் தேசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற ராஜஸ்தானை சேர்ந்த பளுதுாக்குதல் வீராங்கனை யாஷ்திகா ஆச்சார்யா (17), பயிற்சியின்போது 270 கிலோ எடையுள்ள இரும்பு வட்டுகளுடன் கூடிய இரும்பு கழி விழுந்து உயிரிழந்தார். கழுத்தின் பின்புறம் அந்த கழி விழுந்ததால் மூர்ச்சையாகி விழுந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவம் பிகானிர் விளையாட்டு வட்டாரத்தில் பெரியளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

 

The post பளுதுாக்கும் வீராங்கனை பயிற்சியின்போது மரணம் appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Yashtika Acharya ,Junior National Games ,Dinakaran ,
× RELATED பிட்ஸ்