×

ரூ. 20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கு 2 சப். இன்ஸ்பெக்டர்கள் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆயிரம் விளக்கு பகுதியில் நடந்த 20 லட்ச ரூபாய் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர்கள 2 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி தனியார் நிறுவன ஊழியர் முகமது கௌஸ் என்பவரிடம் 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன் பிரதீப், பிரபு ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் சன்னிலாய்டு தவிர மற்ற 4 பேருக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் சன்னிலாய்டுவிடம் நீதிமன்ற உத்தரவில் காவல்துறை விசாரணை செய்ததில் சென்னை ஆயிரம் விளக்கு காவல் எல்லைக்கு உற்பட்ட பகுதியில் ராயபுரத்தை சேர்ந்த தமீம் அன்சாரி என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி கொண்டு வந்த பணம் 40 லட்சத்தை வாங்கி அதில் 20 லட்சத்தை எடுத்துக்கொண்டு 20 லட்சம் ரூபாயை திரும்ப கொடுத்துள்ளனர்.

இந்த குற்றத்தில் உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன் பிரதீப், பிரபு, வணிகவரித்துறை அதிகாரிகள் சுரேஷ், சதீஷ் , பாபு ஆகியோர்க்கு தொடர்பு உள்ளதாக காவல்துறை தெரிவித்து அவர்களுக்கு எதிராக மிரட்டல், பொது ஊழியர் கடமை தவறி செயல்படுதல், நேர்மையற்ற முறையில் பிறர் சொத்துகளை அபகரித்தல், தகவலை மறைத்தல், அடைத்து வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது.

ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் பதிவு செய்த இந்த வழக்கில் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு மனுவை தள்ளுபடி செய்து முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி காவலர்கள் ராஜாசிங், சன்னிலாய்டு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான மாநகர குற்றவியல் வழக்கறிஞர், ஜி.தேவராஜன், இந்த வழக்கின் விசாரணை இன்னும் நிறைவடையவில்லை. இந்த மோசடியில் காவல்துறை, வருமானவரி துறை, வணிக வரிதுறை அதிகாரிகள் தொடர்பு உள்ளது. எனவே முழுமையாக விசாரிக்க வேண்டும். சில முக்கியமாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இன்னும் பலரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் புகார் அளிக்க தயாரக உள்ளனர். சன்னிலாய்டு ஒப்புதல் வாக்குமூலத்தில் 20 லட்சம் ரூபாய் தொகையை குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் பகிர்ந்து கொண்டுள்ளனர். எனவே தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க கூடாது என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி தற்போதைய நிலையில் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post ரூ. 20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கு 2 சப். இன்ஸ்பெக்டர்கள் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Primary Sessions Court ,Thousand Lamakha ,Thiruvallikeni, Chennai ,Dinakaran ,
× RELATED பெருமாள்புரத்தில் கூலிப்படை...