மேட்டூர், பிப்.19: மேட்டூர் குள்ளவீரன்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (62). மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 18ம் தேதி, காவிரியில் மீன் பிடித்து விட்டு, மூலக்காடு பரிசல் துறையில் வலைகளை காய வைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மீண்டும் வந்து பார்த்தபோது, வலைகளை காணவில்லை. அச்சங்காடு வழியாக டூவீலரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, ராமன் மகன் கார்த்திக்(34) என்பவர் சக்திவேலுக்கு சொந்தமான வலைகளை எடுத்து சென்று கொண்டிருந்தார். தனது வலைகளை கொடுக்கும்படி கேட்டதற்கு, கார்த்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சக்திவேல், கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
The post மீனவர் வலையை திருடியவர் கைது appeared first on Dinakaran.
