திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் முழுவதும், விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் பயன்பெறும் வகையில், விவசாயிகளின் நில உடமை விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யும் பணிகள் வேளாண்மைத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருவலாங்காடு வட்டாரம் பழையனூர் கிராமத்தில் விவசாயிகள் நில உரிமம் இணையத்தில் பதிவு செய்யும் பணிகளை கலெக்டர் பிரதாப் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, சி.ஆர்.பி அலுவலர்கள் விரைந்து முழுவீச்சில் பணியை மேற்கொள்ளவும், அனைத்து கிராமங்களிலும் தினசரி பதிவு மேற்கொள்வதை உறுதி செய்யவும் அவர் வலியுறுத்தினார். மேலும், விவசாயிகள் இந்த முகாமில் தங்களது நில உடமை விவரங்களை பதிவு செய்துகொள்ள வலியுறுத்தினார். இதில் தோட்டக்கலை துறை இணை இயக்குனர் ஜெயக்குமாரி அனி, வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கடேசன், வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
The post திருவலாங்காடு ஒன்றியத்தில் நில விவரங்கள் பதிவிடும் பணி: கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.
