பரமக்குடி,பிப்.17: பரமக்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தங்கராஜ்(66). இவருக்கும், காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் வேலுச்சாமி மற்றும் அவரது மகன் குகன், குகன் மாமனார் பாண்டியன் ஆகியோருக்கும் சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 7ம் தேதி சந்தைக்கடை அருகே வேலுச்சாமி, சொத்தை எழுதிக் கொடுக்க சொல்லி தாக்கியதாகவும், அதுபோல் பரமக்குடி மருத்துவமனை வாசலில் வைத்து பாண்டியன் மகள் தேன்மொழியின் தூண்டுதலின் பேரில் அங்கு வந்த குகன், பாண்டியன் மற்றும் வேலுச்சாமி ஆகிய மூவரும் தாக்கியதாக தங்கராஜ், பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காயமடைந்த தங்கராஜ் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் தேன்மொழி, குகன், பாண்டியன், வேலுச்சாமி ஆகியோர் மீது கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே குகன் மற்றும் அவரது மனைவி தேன்மொழி இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் இருவரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post சொத்து தகராறில் முதியவரை தாக்கியதாக புகார்: ஆசிரியர் தம்பதி தலைமறைவு appeared first on Dinakaran.
