×

பாஜ ஆளும் மாநிலங்களில் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

நெல்லை: நெல்லை மாவட்டம் பாளை. அரியகுளத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறும். வடமாநிலங்களில் தமிழர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். பாஜ ஆளும் மாநிலங்களில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று கூறிவிட்டு அடுத்த ஓரிரு நாட்களில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று மறுத்து கூறுகிறார். ’ என்றார்.

The post பாஜ ஆளும் மாநிலங்களில் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Tamils ,BJP ,Selvapperundhagai ,Nellai ,Nellai district Palai ,Congress ,president ,MLA ,Ariyakulam ,India ,Tamil Nadu ,2026 assembly elections ,
× RELATED NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த திட்டம்