×

பல பெண்களை ஏமாற்றி பாலியல் வழக்கில் கைதான பாஜ பிரமுகரின் ஆபாச வீடியோக்கள் சிக்கின: மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது; அண்ணாமலையுடன் செல்பி எடுத்ததும் அம்பலம்

சென்னை: பல இளம்பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த வழக்கில் கைதான பாஜ பிரமுகரின் ஏராளமான ஆபாச வீடியோக்கள் அவரது டேப்லெட்டில் இருந்து சிக்கின. மேலும் மாநில தலைவர் அண்ணாமலையுடன் செல்பி எடுத்துக்கொண்ட படமும் வெளியாகி உள்ளது. சேலையூர் அடுத்த செம்பாக்கம், திரு.வி.க தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் லியாஸ் தமிழரசன் (24). சேலையூர் – அகரம்தென் பிரதான சாலையில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருவதுடன், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ இளைஞரணி செயலாளராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு பள்ளியில் படிக்கும் போது தன்னுடன் படித்த பெண் ஒருவரிடம் பழகி காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி அந்தப் பெண்ணை தனது பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம் இருந்து சிறுக சிறுக சுமார் 20 லட்சம் பணம் மற்றும் 20 சவரன் நகை பெற்று மோசடி செய்துள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் லியாஸ் தமிழரசன் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் ஒரு கட்டத்தில் அந்த பெண் லியாஸ் தமிழரசனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட போது, திருமணம் செய்துகொள்ள முடியாது என மறுத்ததோடு அந்த பெண்ணுக்கு தெரியாமல் லியாஸ் தமிழரசன் அவருடன் உல்லாசமாக இருந்தபோது எடுத்த வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என கூறி மிரட்டலும் விடுத்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் லியாஸ் தமிழரசனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சோதனை செய்ததில் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த பெண்களிடமும் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பணம் மற்றும் நகைகளை பெற்று ஏமாற்றியதும் தெரிந்தது.

புகாரின் பேரில் சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் லியாஸ் தமிழரசனை கைது செய்தனர். விசாரணையில், லியாஸ் தமிழரசன் பல பெண்களை ஏமாற்றி பணம் மற்றும் நகை பெற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. எனவே, போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. லியாஸ் தமிழரசன் பயன்படுத்திய டேப்லெட்டை போலீசார் சோதனை செய்து பார்த்ததில் அதில் லியாஸ் தமிழரசன் 10க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருந்த அந்தரங்க வீடியோக்கள் இருந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அதனை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் லியாஸ் தமிழரசனால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பெண்களுக்கு தற்போது திருமணம் ஆகி விட்டதால் அவர்கள் யாரும் லியாஸ் தமிழரசன் குறித்து புகார் அளிக்க முன்வரவில்லை எனவும் இதுவரை அவரால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் மட்டும் புகார் அளித்து உள்ளதாகவும், ஒரு பெண் திருச்சியில் இருந்து புகார் அளிக்க வர இருப்பதாக தகவல் வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். லியாஸ் தமிழரசன் இளம்பெண்களை காதலிப்பதாக ஆசைவார்த்தைகள் கூறி ஏமாற்றி உல்லாசமாக இருந்து பணம் பறித்து ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தியதற்கு அவரது பெற்றோர் ஏழுமலை, மலர்க்கொடி மற்றும் அவரது அக்கா நான்சி ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தான் ஏமாற்றப்பட்டது குறித்து தெரிய வந்ததை அடுத்து லியாஸ் தமிழரசன் குடும்பத்தினரிடம் தான் கொடுத்த பணம் மற்றும் நகைகளை திரும்ப கேட்டபோது அவற்றை தராமல் ஏமாற்றி வந்ததுடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாருக்கு லியாஸ் தமிழரசனின் தந்தை ஏழுமலை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டும் ஆடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி
யுள்ளது. மேலும் எங்களுக்கு பெரிய, பெரிய ரவுடிகளுடன் தொடர்பு உள்ளது எனக் கூறியும் விரட்டியதோடு பணம் மற்றும் நகையை திரும்ப கேட்டால் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிட்டு அந்த பெண்ணுக்கு திருமணம் நடத்த விடாமல் செய்து விடுவேன் எனவும் கூறி மிரட்டி உள்ளதும் தெரிய வந்துள்ளது. லியாஸ் தமிழரசன் டேப்பில் இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் ஒரு பெண்ணை திருமணம் செய்வது போல் வீடியோ ஒன்றும் சிக்கி உள்ளது.

அதுகுறித்து போலீசார் விசாரணையில் தனது தந்தை ஏழுமலை, தாய் மலர்கொடி மற்றும் குடும்பத்தினருடன் அச்சிறுப்பாக்கம் பகுதியில் உள்ள மாதா கோயிலில் வைத்து கேரளாவை சேர்ந்த பெண் ஒருவரை அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியாமல் தான் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. புதிதாக திருமணம் செய்த பெண் எந்த புகாரும் இதுவரை தெரிவிக்க வில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தங்களை போலீசார் விசாரிப்பார்கள் என தெரிந்து லியாஸ் தமிழரசனின் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.

* மாவட்ட பாஜ மறுப்பும்…
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நியாஸ் தமிழரசன் பாஜவில் எந்த பொறுப்பிலும் இல்லை என செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ தலைவர் ரகுராமன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், 10.2.2025 திங்கட்கிழமை அன்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், சென்னை, செம்பாக்கம் பகுதியை சேர்ந்த லியாஸ் தமிழரசன் (25) என்பவர் பெண்களை ஏமாற்றி மிரட்டல் விடுத்ததாகவும் அதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் பாரதிய ஜனதா இளைஞரணியை சார்ந்தவர் என்று தவறான தகவல் வெளிவந்துள்ளதை அறிந்தேன். அவர் பாரதிய ஜனதா இளைஞரணியை சார்ந்தவர் இல்லை என்பதும், அவர் எங்கள் அதிகாரப்பூர்வ எந்த பதிவேடுகளிலும் அவர் பெயர் இல்லை என்பதும் அவர் அடிப்படை உறுப்பினராகவும் இல்லை என்பதை இதன் மூலம் மறுப்பு தெரிவித்துக்கொள்கிறேன். அவர் தந்தை ஆர்.ஏழுமலை செம்பாக்கம் பகுதி திமுக நிர்வாகி என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.இதன் மூலம் லியாஸ் தமிழரசன் பாஜ பிரமுகர் தான் என்பது உறுதியாகி உள்ளது.

* உண்மை அம்பலம்…
லியாஸ் தமிழரசன் பாஜ பிரமுகர் இல்லை என செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ தலைவர் ரகுராமன் அறிக்கை வெளியிட்ட நிலையில், அவருக்கு கடந்த 13.3.2024 அன்று செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் அதன் மாவட்ட தலைவர் தணிகைவேல் லியாஸ் தமிழரசனுக்கு இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பதவி வழங்கிய அறிவிப்பு லெட்டர் பேட் வெளியாகி உள்ளது. அதேபோல மாநில தலைவர் அண்ணாமலை, மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் ஆகியோர் பிறந்த நாளுக்கு போஸ்டர் அடித்த படங்கள், மாநில தலைவர் அண்ணாமலை, மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வம் ஆகியோருடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டது தற்போது வெளியாகி உள்ளது. இதன் மூலம் லியாஸ் தமிழரசன் பாஜ பிரமுகர் தான் என்பது உறுதியாகி உள்ளது.

The post பல பெண்களை ஏமாற்றி பாலியல் வழக்கில் கைதான பாஜ பிரமுகரின் ஆபாச வீடியோக்கள் சிக்கின: மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது; அண்ணாமலையுடன் செல்பி எடுத்ததும் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Ambalam ,Annamalai ,Chennai ,Selaiyur ,Sembakkam ,
× RELATED தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு – மூவர் கைது