வேடசந்தூர், பிப். 6: வடமதுரை அருகேயுள்ள பிலாத்து பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (65). கூலித்தொழிலாளி. இவர் கடந்த பிப்.3ம் தேதி தனது பேரன் சந்துரு (12) என்பவருக்கு அய்யலூரில் உள்ள தனியார் எலும்பு முறிவு வைத்தியசாலைக்கு சென்று கையில் மாவு கட்டு போட்டு விட்டு டூவீலரில் ஊருக்கு திரும்பினார். அய்யலூர் பேசும் பாலமுருகன் கோயில் பகுதியில் திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது அவ்வழியே ரெட்டியார்சத்திரம் எல்லைபட்டியை சேர்ந்த முத்துகிருஷ்ணன்(42) என்பவர் ஓட்டி வந்த கார் இவர்கள் வந்த டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கருப்பையா, சந்துரு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை எஸ்ஐ தாவூத் உசேன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post அய்யலூரில் விபத்தில் சிக்கிய தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு appeared first on Dinakaran.
