- அமைச்சர்
- சக்ரபாணி
- ராமதாஸ்
- சென்னை
- தமிழ்
- நாடு உணவு மற்றும் உணவு வழங்கல்
- ஏ.சக்ரபாணி
- தமிழ்நாடு அரசு
- டெல்டா
சென்னை: தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று வெளியிட்ட அறிக்கை: டெல்டா அல்லாத மாவட்டங்களில் நேரடி கொள்முதல் நிலையம் திறந்து, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய 14.2.2014 அன்று தமிழ்நாடு அரசாணை மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 2016ம் ஆண்டிலிருந்து தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் டெல்டா அல்லாத மாவட்டங்களில் தேவையைக் கருதி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி வருகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்திடுவதை முறைப்படுத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. இக்குழு தேவையான இடங்களில் உடனுக்குடன் நெல் கொள்முதல் நிலையம் திறந்திட அனுமதி வழங்கி வருகிறது. இதனடிப்படையில் டெல்டா அல்லாத மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் திறக்கப்படும் நெல் கொள்முதல் நிலையங்கள் தவிர தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையத்திற்கு அதன் கோரிக்கையைப் பரிசீலனை செய்து ஒருசில இடங்களில் நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில்தான் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் நெல் கொள்முதல் செய்கிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தும் நெல் கொள்முதல் நிலையங்களிலும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் நடத்தும் நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஒரே விலையில் தான் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் இதை ஏதும் அறியாமல் அல்லது அறிந்தும் அறியாமல் பாமக நிறுவனர், 2016ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து செய்யப்படும் நெல் கொள்முதல் பணி பற்றி கருத்து தெரிவித்திருப்பது சரிதானா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post கொள்முதல் நிலையங்களில் ஒரே விலையில்தான் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது: ராமதாசுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி appeared first on Dinakaran.
