×

பிளவுவாத அரசியலை முன்னெடுக்கும் தமிழக ஆளுநர்: காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் குற்றச்சாட்டு


சென்ைன: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் முதல்வர் ஆக வேண்டும் விருப்பம் தெரிவித்திருக்கிறார் ரவி. இதன்மூலம் பிளவுவாத அரசியலை முன்னெடுக்கிறார் ஆளுநர் ரவி. பாஜ ஆளும் மாநிலங்களில் பட்டியலின பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதும், அவர்கள் படுகொலை செய்யப்படுவதும் தினமும் நடைபெறும் நிகழ்வாகும். அதுபோன்ற நிலை தமிழ்நாட்டில் இருக்கிறதா?

ரவி பிறந்த பீகார் மாநிலத்தில் பட்டியலின மக்களின் இன்றைய நிலையை ஆளுநர் வெளிப்படையாகப் பேசுவாரா? பாஜவின் மாநில தலைவராகவே ஆளுநர் ரவி செயல்பட்டு கொண்டிருக்கிறார். சமூக நீதிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில், குட்டையில் கல்வீசி குழப்ப நினைக்கிறார் ஆளுநர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பிளவுவாத அரசியலை முன்னெடுக்கும் தமிழக ஆளுநர்: காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Governor ,Congress SC ,Chennai ,M.P. Ranjan Kumar ,Ravi ,Chief Minister ,BJP ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...