களக்காடு,ஜன.24: களக்காடு அருகே பைக் விபத்தில் காயமடைந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெயிண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். களக்காடு அருகேயுள்ள ஜெ.ஜெ.,நகர் மேலகாலனி பகுதியைச் சேர்ந்த பாஸ்கரின் மகன் சிவா (35). பெயிண்டிங் வேலைக்கு சென்றுவந்தார். இவரது மனைவி மணிபாரதி. தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 16ம் தேதி களக்காட்டில் இருந்து ஜெ.ஜெ.நகருக்கு பைக்கில் சிவா சென்று கொண்டிருந்தார். ஜெ.ஜெ.நகர் ரோட்டில் சென்ற போது தறிகெட்டு ஓடிய பைக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அளிக்கப்பட்ட முதலுதவியைத் தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து களக்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பைக் விபத்தில் பெயிண்டர் சாவு appeared first on Dinakaran.
