
சென்னை: வியாசர்பாடி பகுதியில் கடந்த 17ம் தேதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பில் சில ரவுடிகள் ஈடுபடுவதாக வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சஞ்சய் குமார் (எ) சஞ்சய் (30) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் வியாசர்பாடி சஞ்சய் நகரை சேர்ந்த ராஜேஷ் (எ) சப்பை ராஜேஷ் (39) மற்றும் வியாசர்பாடி அன்பழகன் தெருவை சேர்ந்த அருண் (எ) டூக் அருண் (24) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
The post பணம் பறிப்பில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் கைது appeared first on Dinakaran.
