×

கொலை மிரட்டலால் தான் பாதிக்கப்பட்டதை மனதில் பூட்டி வைத்தார் மருத்துவர்கள் அளித்த தைரியத்தால் 7 ஆண்டுக்கு முன் பலாத்காரம் செய்யப்பட்டதை வெளியே சொன்னார்: சிறுமியின் தாய் புகாரில் ஆட்டோ டிரைவர் கைது

சென்னை: பலாத் காரத்தால் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகுஅளித்த புகாரின்பேரில் ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜம் (39)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், தனது மகளுடன் கடந்த 9ம் தேதி வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில், புரசைவாக்கத்தில் சொந்த வீட்டின் கீழ் தளத்தில் கணவர் மற்றும் 16 வயது மகளுடன் வசித்து வருகிறேன். மகள் தற்போது அயனாவரம் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த 2015ம் ஆண்டு வீட்டின் மொட்டை மாடியில் எனது மகள் விளையாட சென்றார். அப்போது வீட்டின் முதல் தளத்தில் வசித்து வரும் எனது கணவரின் சகோதரன் நாராயணன் (59), மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மகள் எங்களிடம் சொல்லாமல் தனது மனதிலேயே வைத்துக்கொண்டு இருந்துள்ளார். இதனால் மன ரீதியாக பாதிக்கப்பட்டார். நாங்கள் அவரை கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கீழ்ப்பாக்கம் அரசு மன நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம். அங்கு அவருக்கு மனநல மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அப்போது மருத்துவர்களிடம் எனது மகள் நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார். அதனால் தான் சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதை கேட்டு அதிர்ச்சியடைந்தோம். எனவே, எனது கணவரின் சகோதரனான ஆட்டோ டிரைவர் நாராயணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆட்டோ டிரைவர் நாராயணனை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் தனது சகோதரன் மகள் என்றும் பாராமல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். அதைதொடர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் நாராயணன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து நேற்று முன்தினம் கைது செய்தனர். இது குறித்து சிறுமி கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது: தந்தையின் சகோதரன் என்பதாலும் கொலை மிரட்டல் காரணமாக அந்த சிறுமி கடந்த 7 ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இது குறித்து சொன்னால் தன் தந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ, தன்னை கொன்றுவிடுவாரோ என்ற அதிர்ச்சி, பலத்காரத்தால் ஏற்பட்ட அதிர்ச்சிகளில் இருந்து சிறுமி மீளவில்லை. ஒரு குறிப்பிட்ட பருவ வயதை அடைந்ததும், சிறுவயதில் தனக்கு நேர்ந்த கொடுமை மீண்டும் அவளின் நினைவுக்கு வந்ததால், மனநலம் அதிகமாக பாதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவர்கள் தொடர்ந்து அளித்த கவுன்சிலிங் மூலம் தைரியம், நம்பிக்கை பெற்ற அந்த சிறுமி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் தான் பலாத்காரம் செய்யப்பட்டதை ஓபனாக சொன்னார். இனிமேல் அந்த சிறுமிக்கு எந்த சூழலிலும் மன அழுத்தம் வராது. காரணம், குற்றவாளி கைது செய்யப்பட்டதால், அவர் மனதில் மறைத்து வைத்த பாரத்தை இறக்கி வைத்துவிட்டார். எனவே, குழந்தைகள் தங்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் இதுபோன்று தாமதம் செய்யாமல் உடனே பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்று அந்த சிறுமிக்கு அறிவுறுத்தி உள்ளோம்’’ என்றனர். பருவ வயதை அடைந்ததும், சிறுவயதில் தனக்கு நேர்ந்த கொடுமை மீண்டும் அவளின் நினைவுக்கு வந்ததால், மனநலம் அதிகமாக பாதிக்கப்பட்டார். …

The post கொலை மிரட்டலால் தான் பாதிக்கப்பட்டதை மனதில் பூட்டி வைத்தார் மருத்துவர்கள் அளித்த தைரியத்தால் 7 ஆண்டுக்கு முன் பலாத்காரம் செய்யப்பட்டதை வெளியே சொன்னார்: சிறுமியின் தாய் புகாரில் ஆட்டோ டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Balath Karam ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...