×

மாடு முட்டிய தகராறில் தந்தை, மகன் மீது சரமாரி தாக்குதல் 3 பேர் கைது திருவண்ணாமலை அருகே

திருவண்ணாமலை, ஜன.21: திருவண்ணாமலை அருகே மாடு முட்டிய தகராறில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டி, உருட்டுக்கட்டையால் தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை அடுத்த துர்க்கை நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(50), விவசாயி. இவரது மனைவி மகேஸ்வரி. பொங்கல் பண்டிகையொட்டி கடந்த 16ம் தேதி மாலை முருகன் மற்றும் அதே பகுதியை ேசர்ந்த சிலர் மாடுகளை தெருவில் விட்டுள்ளனர். அப்போது அதே கிராமம் பள்ளத்தெருவை சேர்ந்த பரிமளா என்பவரின் அக்காள் மகன் தினேஷ் மீது மாடு முட்டியுள்ளது. இதுதொடர்பாக முருகன் தரப்பினருக்கும், தினேஷ் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி பரிமளா, அவரது உறவினர்கள் காந்த், சந்திரசேகர், ராஜிவ்காந்தி, குபேந்திரன், அண்ணாமலை ஆகியோர் முருகன் வீட்டிற்கு சென்று ஆபாசமாக பேசி தகராறு செய்துள்ளனர். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ராஜிவ்காந்தி, காந்த் ஆகியோர் வீச்சரிவாளால் முருகனின் மகன் முரளியை சரமாரி வெட்டியுள்ளார். இதை தடுக்க முயன்ற முருகன், அவரது வளர்ப்பு மகள்கள் ஷாலினி, சுவேதா ஆகியோரையும் சரமாரி தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த முரளி, முருகன் ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பரிமளா, சந்திரசேகர், அண்ணாமலை ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், 3 பேரை தேடி வருகின்றனர்.

The post மாடு முட்டிய தகராறில் தந்தை, மகன் மீது சரமாரி தாக்குதல் 3 பேர் கைது திருவண்ணாமலை அருகே appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Murugan ,Nammiyandal ,Maheshwari ,Pongal Findigaioti ,
× RELATED டூவீலர் மீது கார் மோதி சிறுவன், வாலிபர் பலி