×

ராணுவ வீரர் வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு மணலிக்கரை பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (47). ராணுவ வீரர். அந்தமானில் தற்போது பணியில் உள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன் இவரது மனைவி மற்றும் பிள்ளைகள், ஐதராபாத் சென்று இருந்தனர்.

நேற்று இரவு அவர்கள் திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்களும் சிதறி கிடந்தன. பீரோக்களும் திறந்து கிடந்தன. பீரோவில் இருந்த 22 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தன.இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post ராணுவ வீரர் வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Nagarko ,Ajit Kumar ,Kanyakumari district ,Kolangoda ,Andaman ,Hyderabad ,
× RELATED பெருமாள்புரத்தில் கூலிப்படை...