பரமத்திவேலூர், ஜன.18: பரமத்திவேலூர் அடுத்துள்ள அண்ணா நகர் அருகே உள்ள சின்னாம்பள்ளிமேடு பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்வதாக, வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வேலூர் எஸ்ஐ சீனிவாசன் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டார். இதில் சின்னாம்பள்ளிமேடு பகுதியில் மது பாட்டில்களை மறைத்து வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த ராமசாமி (73) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 27 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
The post மது பதுக்கி விற்றவர் கைது appeared first on Dinakaran.

