×

மலைப்பாம்பு சிக்கியது

கடையம்,ஜன.18: ஆழ்வார்குறிச்சி அருகே பரம்பு ஜெகஜீவன்தெரு முருகன் என்பவரது வீட்டு வளாகத்தில் மலை பாம்பு புகுந்தது. இது குறித்து கடையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி உத்தரவின் பேரில் வேட்டைத்தடுப்பு காவலர் வேல்ராஜ் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதுங்கி இருந்த சுமார் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு வாளையார் பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.

The post மலைப்பாம்பு சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Python ,Kadayam ,Murugan ,Parambu Jagajeevan Theru ,Azhwar Kurichi ,Kadayam forest department ,Karunamoorthy ,Velraj ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை