×

சைபர் குற்றங்கள் குறித்து ஜன.29ல் மெரினா கடற்கரை சாலையில் விழிப்புணர்வு நடைபயணம்: மாநில இணையவழி குற்றப்பிரிவு சார்பில் நடக்கிறது

சென்னை: சைபர் குற்றங்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரும் ஜனவரி 29ம் தேதி மாலை மெரினா கடற்கரை சாலையில் ‘சென்னை 1930 விழிப்புணர்வு நடைபயணம்’ நிகழ்ச்சி நடக்கிறது. தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் சார்பில் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு காவல்துறையின் இணைய வழி குற்றப்பிரிவு சார்பில் வரும் ஜனவரி 29ம் தேதி மெரினா கடற்கரை சாலையில் மாலை 5 மணிக்கு ‘சென்னை 1930 விழிப்புணர்வு நடைபயணம்’ நடத்தப்பட உள்ளது. இது பயணம் இணையத்திலுள்ள சைபர் குற்றங்களின் தடுப்பு பற்றியும் மற்றும் அதனை சமூகத்தில் பாதுகாப்பான ஆன்லைன் செயல்பாட்டு நடைமுறைகளை ஊக்கு விப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த விழிப்புணர்வு நடைபயணமானது, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து வகை நபர்களையும் சேர்ந்த சைபர் குற்றத்தை எதிர்த்து ஒருங்கிணைந்த முயற்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்கும்.

இந்நிகழ்ச்சி, சைபர் குற்றங்களை குறித்து மக்களை விழிப்புணர்வுப்படுத்தி தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதில் மற்றும் ஆன்லைன் தனியுரிமையை பராமரிப்பதில் உதவும் நோக்கமாக கொண்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த முக்கியமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதுகாப்பான இணைய சூழலை உருவாக்க அழைக்கிறோம். அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் நடைபயணம் முடிந்தவுடம் பங்கேற்புக்கான அடையாளமாக ‘பிளாக் செயின் மூலம் இயக்கப்பட்ட டிஜிட்டல் சான்றிதழ்’ வழங்கப்படும். இந்த விழிப்புணர்வு நடைபயணத்திற்கு முன்பதிவு செய்வதற்கு https:1930walkathon.in என்ற இணையத்தில் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சைபர் குற்றங்கள் குறித்து ஜன.29ல் மெரினா கடற்கரை சாலையில் விழிப்புணர்வு நடைபயணம்: மாநில இணையவழி குற்றப்பிரிவு சார்பில் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Marina Beach Road ,State Cyber Crime Unit ,Chennai ,Chennai 1930 Awareness Walk ,Tamil ,Nadu ,Director of Police ,Office ,Tamil Nadu… ,Awareness ,on ,Dinakaran ,
× RELATED தொடர் விடுமுறையையொட்டி ஆழியார் அணை,...