×

அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா

 

அறந்தாங்கி, ஜன. 11: அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சார்பு நீதிபதி உமாமகேஸ்வரி கலந்துகொண்டார். பொங்கல் விழாவிவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஆண் பெண் வழக்கறிஞர்களுக்கு சார்பு நீதிபதி பரிசு வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர் சங்க தலைவர்சிவராஜ், செயலாளர் அருண்ராஜ், ஆகியோர் செய்து இருந்தனர். இதில் மூத்த வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் சங்க துணைச் தலைவர் பழனியப்பன் நன்றி கூறினார்.

The post அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,Aranthangi Combined Court Complex ,Aranthangi ,Pongal ,Associate Justice ,Uma Maheshwari ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை