×

சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கேட்ட கடை ஊழியரை தாக்கிய ரவுடி உள்பட 3 பேர் கைது

சென்னை: கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியில் ரோஷன் என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். அப்பகுதியில் பிரபலமான கடை என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும். இதற்கிடையே நேற்று முன்தினம் பிரியாணி கடைக்கு கோடம்பாக்கம் அஜிஸ் நகர் மெயின் ரோட்டை சேர்ந்த சுந்தரம் (47), நண்பர்கள் கோடம்பாக்கம் தாஸ்புரம் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (24), கொலை முயற்சி உள்பட 3 வழக்கில் தொடர்புடைய புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த நரேந்தர் (23) ஆகியோர் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.

அப்போது 3 பேரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பிறகு சாப்பிட்ட பிரியாணிக்கு கடை ஊழியர் பணம் கேட்டுள்ளார். அதற்கு சுந்தரம் ‘யாரிடம் பணம் கேட்கிறாய்…. தினமும் நீ தான் எனக்கு ரூ.10 ஆயிரம் பணம் தர வேண்டும்’ என்று மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், கடை ஊழியரை அவரது காலில் விழ வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் ரோஷன் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சுந்தரம், ஆனந்தகுமார், ரவுடி நரேந்தர் ஆகியோரை கைது செய்தனர்.

The post சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கேட்ட கடை ஊழியரை தாக்கிய ரவுடி உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Rawudi ,Biriani ,Chennai ,Roshan ,Biryani ,Kodambakkam United India Colony ,Mundinam Biryani ,Kodambakkam Aziz Nagar Main Road ,Dinakaran ,
× RELATED பெருமாள்புரத்தில் கூலிப்படை...