×

தனது காரின் மற்றொரு சாவி, பவுச்சுடன் காணவில்லை என சவுந்தர்யா ரஜினிகாந்த், காவல் நிலையத்தில் புகார்

சென்னை: தனது காரின் மற்றொரு சாவி, பவுச்சுடன் காணவில்லை என சவுந்தர்யா ரஜினிகாந்த், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது சொகுசு காரின் சாவி தொலைந்து விட்டதாக புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஏப்ரல் 23ல் கோபாலபுரத்திலிருந்து தேனாம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது சாவி காணாமல் போனதாக, புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனது வீட்டில் உள்ள லாக்கரில் வைத்திருந்த தங்க, வைர நகைகளைக் காணவில்லை என்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post தனது காரின் மற்றொரு சாவி, பவுச்சுடன் காணவில்லை என சவுந்தர்யா ரஜினிகாந்த், காவல் நிலையத்தில் புகார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Soundarya Rajinikanth ,CHENNAI ,Rajinikanth ,Soundarya ,Thenampet ,police station ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் சவுந்தர்யா...