×
Saravana Stores

முதல்வர் படைப்பகம் கட்டடத்தை நவம்பர் 4ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (28.10.2024) சென்னை, அகரம், ஜெகந்நாதன் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பன்னோக்கு மையத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் பகிர்ந்த பணியிடம் (Co-Working Space) அமைக்கப்பட்டு, நடைபெற்றுவரும் இறுதிக்கட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிக்கட்டிலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையான குறிப்பாக அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதிலும் பொருளாதார நிலையில் சரிவர சூழல் இல்லாத மக்களுக்கு அவர்களுக்கு தேவையான படிக்கின்ற வசதி மற்றும் தொழில் முனைவோர் பயிற்சியை தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் தன்னுடைய சொந்த முயற்சியால் செய்து கொண்டிருக்கின்ற தமிழ் நாடு முதலமைச்சர் அவர்கள் என்றால் அதற்கு மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

அந்த வகையில் ஏற்கனவே கணினி பயிற்சி வகுப்பு மறைந்த அனிதாவின் நினைவாக அவர்களின் பெயரிலேயே துவங்கப்பட்டு முதலில் முழுக்க பெண்களுக்கென்று தனியார் ஒரு கணினி மையத்தை கட்டணமில்லா பயிற்சி மையத்தை உருவாக்கினார்.

அதைத் தொடர்ந்து ஆண்களுக்கு என்று கட்டணம் இல்லாமல் கணினி பயிற்சி மையத்தை உருவாக்கினார், அதைத் தொடர்ந்து தையல் பயிற்சி கூடத்தை கட்டணம் இல்லாமல் உருவாக்கினார். இந்த மூன்று பயிற்சி கூட்டத்தில் பயலுகின்ற மாணவர் செல்வங்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் அவர்கள் பயிற்சி முடித்த பிறகு கணிணி பயிற்சி முடித்தவர்களுக்கு இலவசமாக மடிக்கணினியும், Tally தேர்வுக்குண்டான கட்டணத்தையும் தானே தன் சொந்த பொறுப்பில் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு கணினி முடிப்பதற்கு உண்டான tally தேர்வு முடித்ததற்கான சான்றிதழ்களும், மடிக்கணினியும் இலவசமாக கட்டணம் இல்லாமல் வழங்கி கொண்டு வருகின்றார்.

அதேபோல் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கும் தையல் பயிற்சி முடிவுற்ற பிறகு அவர்களுக்கு பல்வேறு பரீட்சைகள் வைக்கப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழலும், அதேபோல் இலவசமாக மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும் வழங்கப்படுகின்றது.

இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுபவர் நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் என்பது ஆட்சியில் இருக்கும்போது மட்டும் இல்லாமல் ஆட்சியில் இல்லாதபோதும், இது முழுவதுமாக பெண்கள் கணினி கற்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த மையம் அனிதா பேரிலே, தொடர்ந்து அந்த மையத்திலே இதுவரையில் 2000க்கும் மேற்பட்ட பெண்கள் பலனடைந்திருக்கின்றார்கள்.

13வது நிகழ்வாக அதாவது 13-வது பேட்ச்சாக வருகின்ற நான்காம் தேதி அதில் பயிற்சி முடித்தவர்களுக்கு கணினி வழங்க இருக்கின்றார். 105 பிள்ளைகளுக்கு கணினியும், 360 பிள்ளைகளுக்கு தையல் இயந்திரமும் வருகின்ற நான்காம் தேதி வழங்க இருக்கின்றார்.

அதோடு இலவசமாக கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை மையத்தை தொடங்கினார். அந்த இலவச கண் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கு கண் குறைபாடு உள்ளவர்களுக்கு எந்த விதமான கட்டணமும் இல்லாமல் மூக்கு கண்ணாடி மற்றும் புத்தாடைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேபோல் புறை அறுவை சிகிச்சை என்பது கட்டணம் இல்லாமல் சொந்த ஏற்பாட்டில் அகர்வால், சங்கர் நேத்ராலயா போன்ற உயர்தர மருத்துவமனைகள் மூலமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு நிகழ்வாக இன்றைக்கு முதல்வர் படைப்பகம் என்ற பெயரில் சென்னை பெருநகர மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தமிழக முதல்வர் அவர்களுடைய சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை கொண்டு புதிதாக “முதல்வர் படைப்பகம்” என்பதை வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி துவக்கி வைக்க உள்ளார்கள்.

இந்த படைப்பகத்தில் வருகின்றவர்களுக்கு படிப்பதற்கென்று ஒரு தளமும், அதை போல் பணியாற்றுவதற்கு என்று ஒரு தளமும், உணவு அருந்துவதற்கு உணவு கூடம் என்ற ஒரு தளமும் மூன்று தளங்களைக் கொண்ட இந்த கட்டடம் மாணவனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வருகின்ற நவம்பர் மாதம் 4ம் தேதி துவக்கப்பட இருக்கின்றது. ஒரே முறை 51 நபர்கள் படிக்கின்ற அளவிற்கு படிக்கின்ற வசதி ஏற்பாடு செய்யப்படுகின்றது. அந்த படிப்பிற்கு தேவையான புத்தகங்களை கொண்ட ஒரு நூலகமும் அமைக்கப்பட இருக்கின்றது.

அதேபோல் கோவர்கிங் ஸ்டேஷன் எனப்படுகின்ற, அவர்கள் பணி செய்வதற்குண்டான ஒரு தளத்தை உருவாக்கியிருக்கின்றோம். அதில் 38 நபர்கள் ஒரே முறையாக படிப்பதற்குண்டான நல்ல சூழ்நிலையை உருவாக்கி தந்திருக்கின்றோம்.

அதில் 3 கலந்தாய்வு கூடம் (Conference Hall) உருவாக்கின்றோம். ஒவ்வொரு கலந்தாய்வு கூடத்தில் இரண்டில் 4 – 4 நபர்களும், ஒன்றில் 6 நபர்களுக்கும் இதில் உட்கார்ந்து பணிகளை மேற்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகின்ற நவம்பர் மாதம் 4ம் தேதி கொளத்தூரில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் சென்னையிலே ஏற்படுத்தப்படுகின்ற முதல் கோ- ஒர்க்கிங் ஸ்பேஸ் (1st Co-Working Space) எனப்படும் “முதல்வர் படைப்பகம்” கட்டடத்தை திறந்து வைக்கிறார்.

குறைந்த கட்டணத்தில் அதாவது முழுவதுமாக இலவசம் என்றால் அதை வந்து பயன்படுத்துபவர்கள் நேர்த்தியானவர்கள் கிடைக்க மாட்டார்கள், பொழுதுபோக்கு கூடமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்ற கட்டணத்தை தான் நிர்ணயித்துள்ளோம். அதேபோல் பணி செய்பவர்கள் கூட கோ ஒர்கிங் ஸ்பேஸ்-ல் கூட பெரிய பெரிய மிட்டா மிராசு கம்பெனிகளுக்கு வழங்கப் போவதில்லை.

பொருளாதாரத்தில் சாதாரண நிலையில் இருக்கின்ற அந்த நிறுவனங்களுக்கு இந்த பணியிடத்தினை பகிர உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்கும் எவ்ளோ குறைந்த அளவு கட்டணத்தை நிர்ணயிக்க முடியுமோ அந்த அளவு குறைத்து கட்டணத்தை நிர்ணயிக்க உள்ளோம். இது ஓர் புது மாதிரியான முயற்சி இந்த முயற்சி அணைத்து பகுதிகளிலும் தொடர வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் விருப்பம் தெரிவித்து இருக்கின்றார். இது கொளத்தூரை முன்மாதிரியாக ஆக்குகின்ற முயற்சி.

முழு முயற்சியில் இந்த அமைப்பு உருவாவதற்கு நம்முடைய துறையினுடைய செயலாளர் அன்பிற்கினிய காகர்லா உஷா, அவர்களும் இந்த சென்னை பெருநகர மாநகராட்சிகளுடைய ஆணையாளர் குமரகுருபரன், அவர்களும் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலாளர் அன்பிற்கினிய அன்சுல் மிஸ்ரா, அவர்களும் ஆர். பி. சி. பிரவீன் அவர்களும் ஒருங்கிணைந்து இந்த பணிகளை சிறப்போடு மேற்கொண்டு வருகிறார்கள். மாணவ செல்வங்களுக்கு இந்த முதல்வர் படைப்பகம் அர்ப்பணிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஆய்வின்போது மாண்புமிகு மேயர் ஆர்.பிரியா ராஜன் அவர்கள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜே.பிரவின் குமார், மண்டலக் குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார், மாநகராட்சி மண்டல அலுவலர் ஏ.எஸ்.முருகன், சி.எம்.டி.ஏ. கண்காணிப்புப் பொறியாளர் பாலமுருகன், செயற்பொறியாளர்கள் ராஜன் பாபு, சரவணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஐ.சி.எப்.முரளி, சந்துரு, மாமன்ற உறுப்பினர்கள் நாகராஜன், தாவுத்பீ மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post முதல்வர் படைப்பகம் கட்டடத்தை நவம்பர் 4ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Minister's ,Building ,Chennai ,Tamil ,Nadu ,Chennai Metropolitan Development Group ,Development ,Pannoku Center ,Jagannathan Road, Akaram, Chennai ,
× RELATED விளையாட்டுத் துறையில் உலகத்தையே...