×

பாதுகாப்பு பணியில் 700 போலீசார் எஸ்பி தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு எஸ்பி அரவிந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய இடங்களில் தீவிர வாகன தணிக்கை செய்து, குடிபோதை, அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அதிவேகமாக வாகனங்களை செலுத்தி, பந்தயங்களில் ஈடுபடுவதும், சாகசங்களில் ஈடுபடுவதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பொழுதுபோக்கு தலங்கள் மற்றும் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அரசின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.  மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு அனுமதிபடி இரவு 11 மணிவரை செயல்பட வேண்டும்.மேற்படி பண்டிகை தினங்களை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் சுமார் 700 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.விபத்துகள் மற்றும் நோய் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு அளித்து, பண்டிகை நாட்களை மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட வேண்டும். மேலும், தங்கள் பகுதிகளில் செயல்படும் பொழுது போக்கு மையங்கள் மற்றும் விடுதிகள் விதிமுறைகளை மீறினாலும், மதுபோதையில் யாராவது வாகனம் ஓட்டுதல் மற்றும் சாகசங்களில் ஈடுபட்டால், 7200102104 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். அவர்களது விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என கூறப்பபட்டுள்ளது….

The post பாதுகாப்பு பணியில் 700 போலீசார் எஸ்பி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,SP ,Aravindan ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து...