×
Saravana Stores

குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் வைஷாலி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (26). இவர் மப்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு சூர்யா என்ற மனைவியும், ஒரு வயதில் குழந்தையும் உள்ளது. தினேசுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது அவரை மனைவி சூர்யா கண்டித்துள்ளார். இந்நிலையில், குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்பதற்காக மனைவி சூர்யா, கணவர் தினேஷிடம் பணம் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுள்ளார்.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 16ம் தேதி வீட்டைவிட்டு சென்ற தினேஷ் மீண்டும் திரும்பவில்லை. இதனால் கணவர் காணாமல் போனதாக கடம்பத்தூர் காவல் நிலையத்தில் சூர்யா புகார் கொடுத்தார். இந்தநிலையில், 5 நாட்களுக்குப் பிறகு நேற்றுமுன்தினம் கடம்பத்தூர் அடுத்த செஞ்சி பானம்பாக்கம் ஏரியில் உள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் கடம்பத்தூர் போலீசார் தினேஷை சடலமாக மீட்டனர்.

The post குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Dinesh ,Kadampathur Vaishali Nagar ,Mappettai ,Surya ,
× RELATED இயற்கை இடர்பாடுகள் குறித்து முன்கூட்டியே அறிய செயலி: கலெக்டர் தகவல்