×

அடுத்தடுத்து 3 கோயில்களில் திருட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் கிராமத்தில் அடுத்தடுத்து 3 கோயில்களில் தொடர்ச்சியாக சூலம் திருடப்பட்டது. திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் கிராமத்தில் முனீஸ்வரர் கோயிலில் பூஜை சாமான்கள், விளக்குகள் மற்றும் ஊஞ்சல் திருடு போனது. அந்த கோயில் அருகே உள்ள துலகத்தம்மன் அம்மன் கோயிலில் பித்தளையால் செய்யப்பட்ட சூலமும், அருகில் உள்ள செல்லியம்மன் கோயில் சூலமும் திருடு போனது. புகாரின்படி மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 3 கோயில்களில் திருட்டு சம்பவம் நடந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்….

The post அடுத்தடுத்து 3 கோயில்களில் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Venkathur village ,Venkatur village ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்