×
Saravana Stores

கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றபோது ஊராட்சி மன்ற எழுத்தர் மாரடைப்பால் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூரில் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றபோது ஊராட்சி மன்ற எழுத்தர் மாரடைப்பால் உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலகத்தில் நேற்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள திருத்தணி வட்டம் மத்தூர் ஊராட்சி மன்ற எழுத்தர் வெங்கடேன் (58) என்பவர் வந்துள்ளார். பிற்பகல் 2 மணியளவில் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் உட்கார்ந்து இருந்த வெங்கடேசன் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து வெங்கடேசனை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டதால் வெங்கடேசன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த தகவலின்பேரில் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றபோது ஊராட்சி மன்ற எழுத்தர் மாரடைப்பால் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Panchayat ,Tiruvallur ,Tiruvallur District Rural Development ,Panchayat Department ,Tiruthani Vattam Mathur ,Panchayat Clerk ,Dinakaran ,
× RELATED சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி...