×

கரூர் பொன்நகர் சந்திப்பில் நிழற்குடை அமைக்க வேண்டும்

 

கரூர், அக். 18: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பொன்நகர் பிரிவு அருகே நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் அடுத்ததாக பொன்நகர் சந்திப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியின் வழியாக கரூரில் இருந்து திண்டுக்கல், ஈசநத்தம், திருச்சி பைபாஸ் சாலை போன்ற பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

மேலும், இந்த பகுதியில் இருந்து கரூர், தாந்தோணிமலை, ஒத்தையூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் பிரிந்து செல்கிறது. இதனைத் தொடர்ந்து காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவு பள்ளி, கல்லூரி வாகனங்கள் இந்த சந்திப்பு வழியாக சென்று வருகின்றன. இந்த பகுதியில் நிழற்குடை வசதி இல்லாததால் அனைத்து தரப்பினர்களும் மரத்தடி நிழலில் நின்றுதான் பேரூந்துகளில் ஏறிச் செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள பொன் நகர் சந்திப்பில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கரூர் பொன்நகர் சந்திப்பில் நிழற்குடை அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Karur Ponnagar ,Karur ,Ponnagar Division ,Karur Corporation ,Rayanoor ,Ponnagar ,Dindigul ,Esanatham ,
× RELATED கரூர்- கோவை சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்