×

தனியார் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான இடம் ஏலம்

 

கரூர், அக். 16: தனியார் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான இடம் ஏலம் விடப்படுவதாக கலெக்டர் தெரிவித்தார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஈரோடு, விக்னேஸ்வரா பைனான்ஸ் கார்ப்பரேசன், நிதி நிறுவனத்திற்கு சொந்தமான அசையா சொத்தான கரூர் மாவட்டம் மூக்கணாங்குறிச்சி கிராமத்தில் உள்ள காலியிடத்தினை அக்டோபர் 24ம்தேதி பிற்பகல் 4 மணியளவில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.

ஏலம் கோர விரும்பும் நபர்கள் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பெறப்பட்ட ரூ. 25ஆயிரத்துக்கான வரைவோலையை (டிமான்ட் டிராப்ட்) சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அசையா சொத்து மற்றும் ஏல நிபந்தனைகள் விபரங்களை கரூர் மாவட்ட இணையதளத்தில் ™ (www.karur.nic.in) காணலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தனியார் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான இடம் ஏலம் appeared first on Dinakaran.

Tags : Karur ,District ,Collector ,Thangavel ,Erode, Wigneswara Finance Corporation ,Dinakaran ,
× RELATED கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பாசி படிந்துள்ள தண்ணீர் தொட்டி