×

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் ‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற தலைப்பில் போட்டி: நவ.15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் தொடர்ந்து இளைஞர்கள், பொதுமக்கள் இடையே புகையிலை பொருட்கள் மற்றும் மது மீது நாட்டம் ஏற்படுவதை தடுப்பது அரசின் நோக்கமாகும். எனவே, போதையின் தீமைகள் குறித்து விரிவாக விளம்பரம் செய்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மூலம் ‘போதையில்லா தமிழ்நாடு’ என்கிற தலைப்பில் ரீல்ஸ், போஸ்டர் டிசைன், மீம்ஸ் ஆகிய போட்டிகள் நடத்த முன்வந்துள்ளது.

இந்த போட்டிகளில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் என பல்வேறு பிரிவினரும் கலந்து கொண்டு தங்கள் சுயமான கற்பனையில் உருவான படைப்புகளை வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் tndiprmediahub@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் அனுப்பிவைக்கும் படைப்புகளில் சிறந்த படைப்பாளர்களை தேர்ந்தெடுத்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பிப்பார்.

The post தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் ‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற தலைப்பில் போட்டி: நவ.15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Tamil Development and Media Department ,CHENNAI ,Tamil Development and Press Department ,Tamil Nadu ,Department of Tamil Development and Press ,
× RELATED சென்னை போரூரில் மழை காரணமாக மின்...