×
Saravana Stores

தீபாவளிக்கு டிரஸ் கேட்டு மனைவி தகராறு தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

 

புதுச்சேரி, அக். 16: தீபாவளிக்கு டிரஸ் கேட்டு காதல் மனைவி சண்டை போட்டதால் மனமுடைந்த கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி சாரம் சித்தன்குடி முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் நரசிம்மன் (26). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நிவேதிதா. இருவரும் காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர்.

தீபாவளி பண்டிகை வருவதையொட்டி, நேற்று முன்தினம் புத்தாடை மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி தருமாறு கணவரிடம் நிவேதிதா கேட்டுள்ளார். அதற்கு நரசிம்மன், ஆன்லைனில் சிறப்பு தள்ளுபடி போடும்போது வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார். எப்போது பார்த்தாலும் ஆன்லைனில்தான் வாங்கி தருவீர்களா… கடைக்கு நேராக அழைத்து சென்று வாங்கி தர மாட்டீர்களா? என கேட்டு நிவேதிதா சண்டை போட்டாராம். பிறகு, அவர் கணவருடன் கோபித்துக் கொண்டு வேறு அறைக்கு சென்றுவிட்டார்.

இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த நரசிம்மன் வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் போர்வை மூலம் தூக்கு போட்டு தொங்கியுள்ளார். இதைப்பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் நரசிம்மனை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நரசிம்மனின் சகோதரர் ராமராஜா கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தீபாவளிக்கு டிரஸ் கேட்டு மனைவி தகராறு தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Narasimhan ,Saram Siddankudi ,First Cross Street ,
× RELATED தீபாவளியை ஒட்டி கட்டட...