×

ஒரே நாளில் 30 ஆயிரம் பேருக்கு உணவு

பெரம்பூர்: திரு.வி.க. நகர் 6வது மண்டலத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 6வது மண்டலம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பலர் வீடுகளிலேயே தங்கி உள்ளனர். அந்தந்த பகுதி மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மாமன்ற ஊழியர்கள் மூலமாக நேற்று மதியம் சுமார் 6000 பேருக்கு சாப்பாடு விநியோகிக்கப்பட்டது. நேற்று இரவு திருவிக நகர் மண்டலம் முழுவதும் சுமார் 30,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. நேற்று மாலை கொளத்தூர் தென்பழனி நகர் முதல் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தயாரிக்கப்படும் உணவு தரமாக உள்ளதா என்பது குறித்து திருவிக நகர் 6வது மண்டல கண்காணிப்பு அலுவலர் கணேசன் பார்வையிட்டார்.

The post ஒரே நாளில் 30 ஆயிரம் பேருக்கு உணவு appeared first on Dinakaran.

Tags : Perambur ,Mandal ,Dinakaran ,
× RELATED பெரம்பூர், வியாசர்பாடி சுந்தரம்...