×

கர்நாடக திமுக பிரமுகர் ஏழுமலை காலமானார்

பெங்களூரு: பெங்களூரு, இராமசந்திரபுரத்தில் வசித்தவர் எஸ்.ஏழுமலை. திராவிட முன்னேற்ற கழக மூத்த முன்னோடியான அவர், திராவிட இயக்க தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாளை சிறப்பாக கொண்டாடி வந்தார். இராமசந்திரபுரம் வார்டு திமுக துணை செயலாளராக இருந்தார். 40 ஆண்டுக்கும் மேலாக கட்சியில் இணைந்து பணியாற்றினார். சில நாட்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை காலமானார்.

பெங்களூரு இராமசந்திரபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு மாநில திமுக அவைத்தலைவர் மொ.பெரியசாமி, மாநில அமைப்பாளர் ந.இராமசாமி, மாநில பொருளாளர் கே.தட்சணாமூர்த்தி, மாநில இளைஞரணி அமைப்பாளர் டி.சிவமலை, காங்கிரஸ் சம்பத் உள்பட நூற்றுக்கணக்கான திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை உடல் தகனம் செய்யப்பட்டது.

The post கர்நாடக திமுக பிரமுகர் ஏழுமலை காலமானார் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,DMK ,Yehumalai ,Bengaluru ,S. Ejumalai ,Ramachandrapuram, Bengaluru ,Dravida Munnetra Kazhagam ,Dravida ,Ramachandrapuram ,Karnataka DMK ,
× RELATED கர்நாடக மாநிலத்தில் போலி சாதி...