×

கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு

பெங்களூரு: லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் இருந்த 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மாநிலத்தின் ரெய்ச்சூர் தாலுகாவை சேர்ந்தவர்கள் மான்வி தாலுகாவில் உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் பயணம் செய்த கார் மான்வி தாலுகா, கல்லூரு கிராமத்தின் அருகில் சென்று கொண்டிருந்தபோது, ரெய்ச்சூரில் இருந்து மான்வி நோக்கி வேகமாக வந்த லாரி, எதிரில் வந்து கார் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மூன்று பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் சிரவார போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காரில் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களின் உடல்களை மீட்டு மான்வி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து சிரவார போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து காரணமாக சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Raichur taluk ,Manvi taluk ,Dinakaran ,
× RELATED கால்வாயில் அடித்து செல்லப்பட்ட தாய் பலி, மகளை தேடும் பணி தீவிரம்