×

ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், அக். 15: சேலம் மாவட்ட அனைந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ். ஓய்வூதிய அமைப்பினர் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமைப்பின் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். ஜூலை முதல் ஓய்வு பெற்ற தபால் ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய பஞ்சபடியை ஒன்றியஅரசு உடனே வழங்க கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் நேதாஜி, சண்முகம்,ராஜ்குமார், கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem District ,All India Post R.M.S. ,Head Post Office ,Salem Old Bus Stand ,Venkatesan ,Dinakaran ,
× RELATED ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்த மோட்டார் வாகன ஆய்வாளர் கைது