×

3 ஆண்டு தலைமறைவாக இருந்த பெண் கைது

சேலம், அக்.17: சேலம் டவுனில் அடிதடி வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் 3 ஆண்டு தலைமறைவாக இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். சேலம் டவுன் தாதுபாய்குட்டை பகுதியை சேர்ந்தவர் செண்பகவடிவு (43). இவர் மீது சேலம் டவுன் போலீசில், கடந்த 2010ம் ஆண்டு அடிதடி வழக்கு பதிவானது. இந்த வழக்கு சேலம் ஜே.எம்.1 கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ஆஜராகாமல் செண்பகவடிவு இருந்துள்ளார். இதனால் தலைமறைவான அவரை கைது செய்து ஆஜர்படுத்த பிடிவாரண்ட் பிறப்பித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதன்பேரில் நேற்று, சேலம் டவுன் இன்ஸ்பெக்டர் சந்திரகலா தலைமையிலான போலீசார், செண்பகவடிவை கைது செய்தனர். பின்னர், சேலம் ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர், மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் சேலம் பெண்கள் கிளைச்சிறையில் அவரை அடைத்தனர்.

The post 3 ஆண்டு தலைமறைவாக இருந்த பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Town ,Chenpagavadivu ,Dadhubaigutta ,Salem Town Police ,
× RELATED ஓடை, கால்வாய்களில் தூர்வாரும் பணி தீவிரம்