×

மது விற்றவர் கைது 10 பாட்டில்கள் பறிமுதல்

சேந்தமங்கலம், அக்.15: நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி அருகே சிங்களாந்தபுரம் பகுதியில் உள்ள ஓடைக்கரையில், மது பதுக்கி விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கடைத்தது. இதன்பேரில், பேளுக்குறிச்சி எஸ்ஐ சத்யா தலைமையிலான போலீசார், அப்பகுதியில் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டனர். இதில், மது பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல்(52) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 மதுபாட்டில்களை கைப்பற்றினர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையிலடைத்தனர்.

The post மது விற்றவர் கைது 10 பாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Singalanthapuram ,Belukurichi ,Namakkal district ,SI Sathya ,Dinakaran ,
× RELATED ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்