×
Saravana Stores

புதிய தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருடன் ஐக்கிய பேரவை நிர்வாகிகள் சந்திப்பு

 

தஞ்சாவூர்: புதிதாக பொறுப்பேற்றுள்ள தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்தினர் . புதிதாக பொறுப்பேற்றுள்ள தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை நிர்வாகிகள் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்தினர். தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக அண்ணாதுரை புதிதாக பொறுப்பேற்றுள்ளார்.

இவரை தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை தஞ்சாவூர் மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது தஞ்சாவூர் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் முரளிதரன், அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை மாநகரத் தலைவர் முனைவர் ராஜீவ் காந்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதற்கு முன்பு முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை சென்னையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக துணை இயக்குனராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post புதிய தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருடன் ஐக்கிய பேரவை நிர்வாகிகள் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : New Thanjavur District ,United Council Executives ,Thanjavur ,Government Employees ,United Council ,District ,Principal Education Officer ,Government Employees United Council ,Thanjavur District ,Dinakaran ,
× RELATED தலைமை அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு துவங்கிய குழந்தைகளுக்கு சான்றிதழ்