×

தலைமை அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு துவங்கிய குழந்தைகளுக்கு சான்றிதழ்

 

தஞ்சாவூர், அக்.18: தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் அஞ்சலக சேமிப்பு கணக்கு துவங்கிய குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் அஞ்சலக சேமிப்பு கணக்கு துவங்கிய மூன்று வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தஞ்சாவூர் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி திருச்சி மத்திய மண்டல தலைவர் அறிவுறுத்தலின் பெயரில் “என் முதல் சேமிப்பு” சான்றிதழ்களை வழங்கி குழந்தைகளை உற்சாகப்படுத்தினார்.

இதன் மூலம் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் எதிர்கால வாழ்வை வளமாக்க அஞ்சலகங்களில் உள்ள பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களை தங்கள் குழந்தைகள் பெயரில் துவங்கி பயன்பெற வேண்டுமாய் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் பற்றிய விவரங்களை அறிய தங்களின் அருகிலுள்ள அஞ்சலகங்களை அணுகவும் என தஞ்சாவூர் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

The post தலைமை அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு துவங்கிய குழந்தைகளுக்கு சான்றிதழ் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur Head ,Post Office ,Thanjavur Head Post Office ,
× RELATED தஞ்சாவூர் டைடல் நியோ பூங்காவில் நிறுவனங்களின் தொடக்கவிழா