×

குரூப்-4 காலியிடங்கள் எண்ணிக்கையை 15,000 வரை அதிகரிக்க ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-4ன் கீழ் உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, 2024ம் ஆண்டு தொகுதி-4 போட்டித் தேர்வினை எழுதிவிட்டு முடிவிற்காக காத்துக் கொண்டிருக்கும் எதிர்கால இளைஞர்களின் நலன், அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற இலக்கு, லட்சக்கணக்கில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தொகுதி-4ன் கீழ் வரும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15,000 வரை அதிகரிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post குரூப்-4 காலியிடங்கள் எண்ணிக்கையை 15,000 வரை அதிகரிக்க ஓபிஎஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : OPS ,CHENNAI ,Former ,Chief Minister ,O. Panneerselvam ,Tamil Nadu Public Service Commission ,Dinakaran ,
× RELATED சென்னை தலைமை அலுவலகத்தில் 53வது ஆண்டு...