×

மோசமான வானிலை கோவையில் திடீரென தரையிறங்கிய விமானங்கள்

கோவை: துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி நேற்று காலை 7 மணிக்கு ஒரு விமானம் சென்றது. அந்த விமானம் தரையிறங்க முயன்ற போது மேகமூட்டம் மற்றும் கடும் பனி காரணமாக விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முடியாத நிலைமை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த விமானம் கோவைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. காலை 8 மணிக்கு கோவை விமான நிலையத்தில் துபாய் விமானம் வந்து தரை இறங்கியது. இதேபோல், மற்றொரு துபாய் விமானமும் கோழிக்கோட்டில் இறங்க முடியாத நிலையில் கோவைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.அந்த விமானமும் கோவை விமான நிலையத்திற்கு வந்தது. பின்னர், மேகமூட்டம் சரியான பின்னர் 2 விமானமும் காலை 8.30 மணிக்கு பயணிகளுடன் மீண்டும் கோழிக்கோடு நோக்கி புறப்பட்டு சென்றது. விமானம் தரையிறங்க முடியாத நிலையில் கோழிக்கோட்டில் இறங்க வேண்டிய பயணிகள் தவிப்படைந்தனர்.

The post மோசமான வானிலை கோவையில் திடீரென தரையிறங்கிய விமானங்கள் appeared first on Dinakaran.

Tags : Goa ,DUBAI ,KERALA STATE OF KOZHIKODU ,Dinakaran ,
× RELATED துபாய் – கோழிக்கோடு சென்ற விமானம் கோவையில் அவசரமாக தரையிறக்கம்..!!